மின்சார வாகன மின்னேற்றக் கட்டமைப்பு மேம்பாடு குறித்த தேசியக் கொள்கை வரைவு மீதான பொதுமக்களின் கருத்துகளைக் கோருதல்
பங்குதாரர்களுடனான கலந்தாலோசனைகளைத் தொடர்ந்து, வலுசக்தி அமைச்சகத்தால் “மின்சார வாகன மின்னேற்றக் கட்டமைப்பு மேம்பாட்டிற்கான தேசியக் கொள்கை”யின் இறுதி வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கொள்கை வரைவு, மேலதிக கருத்துகளைப் பெறுவதற்காக இப்போது அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இக்கொள்கை வரைவு குறித்து, ஆர்வமுள்ள அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை, கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு 30.09.2026 அன்று அல்லது அதற்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறு வலுசக்தி அமைச்சகம் கேட்டுக்கொள்கிறது:
உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைச் சமர்ப்பிக்கும் முறை:
1.மின்னஞ்சல் மூலம் : dir.tech.power@energymin.gov.lk
2.கடிதம் மூலம் : செயலாளர், வலுசக்தி அமைச்சு, இல. 437, காலி வீதி, கொழும்பு 03
செயலாளர்
வலுசக்தி அமைச்சு
